வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்;
வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்;
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங்
கங்கை தோய்ந்த சடையார் போலும்;
கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்;
கட்டங்கம் ஏந்திய கையார் போலும்;
அடி விளங்கு செம் பொன்கழலார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.