ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு
வெண்தலை கலனா ஏந்தி, நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல்
ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்;
மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும்,
மதி பிறந்த விண்ணும், மண்ணும்,
ஆகாசம், என்று இவையும் ஆனார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.