கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர்
போது, தாது அணிந்த கண்ணி போலும்;
நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல்
கண்டத்து, இறையார் போலும்;
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி
மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்;
அடியார் புகல் இடம் அது ஆனார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.