தண்மையொடு வெம்மை தான் ஆயினான் காண்; சக்கரம்
புள்பாகற்கு அருள்செய்தான் காண்;
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண்; காமன்
உடல் வேவித்த கண்ணினான் காண்;
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான்
காண்; இருவர்க்கு எரி ஆய் அருளினான் காண்;
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி
தண் வீழிமிழலையானே.