காது இசைந்த சங்கக் குழையினான் காண்; கனகமலை
அனைய காட்சியான் காண்;
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண்; வல்
ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண்;
ஆதியன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்;
ஐந்தலை மாநாகம் நாண் ஆக்கினான் காண்;
வேதியன் காண்; வேதவிதி காட்டினான் காண் விண்
இழி தண் வீழிமிழலையானே.