மெய்த்தவன் காண், மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம்;
விருப்பு இலா இருப்புமன வினையர்க்கு என்றும்
பொய்த்தவன் காண்; புத்தன் மறவாது ஓடி எறி சல்லி
புதுமலர்கள் ஆக்கினான் காண்;
உய்த்தவன் காண், உயர் கதிக்கே உள்கினாரை; உலகு
அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்யச் செய்யும்
வித்தகன் காண் வித்தகர் தாம் விரும்பி ஏத்தும் விண்
இழி தண் வீழிமிழலையானே.