நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்; நித்தமணவாளன்
என நிற்கின்றான் காண்;
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண்; காலன் உயிர்
காலால் கழிவித்தான் காண்;
செய்ய திருமேனியில் வெண்நீற்றினான் காண்; செஞ்சடைமேல்
வெண்மதியம் சேர்த்தினான் காண்;
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண்
வீழிமிழலையானே.