கண் துஞ்சும் கரு நெடுமால் ஆழி வேண்டி, கண் இடந்து,
சூட்ட, கண்டு அருளுவான் காண்;
வண்டு உண்ணும் மதுக் கொன்றை, வன்னி, மத்தம்,
வான்கங்கை, சடைக் கரந்த மாதேவன் காண்;
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண்; பரமன்
காண்; பரமேட்டி ஆயினான் காண்;
வெண்திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண்
விண் இழி தண் வீழிமிழலை யானே.