சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால்
பிளப்பித்த சதுரர் போலும்;
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும்; நாரணனை
இடப்பாகத்து அடைத்தார் போலும்;
குமரனையும் மகன் ஆக உடையார் போலும்; குளிர்
வீழிமிழலை அமர் குழகர் போலும்;
அமரர்கள் பின் அமுது உண, நஞ்சு உண்டார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.