திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால்
பிளப்பித்த சதுரர் போலும்;
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும்; நாரணனை
இடப்பாகத்து அடைத்தார் போலும்;
குமரனையும் மகன் ஆக உடையார் போலும்; குளிர்
வீழிமிழலை அமர் குழகர் போலும்;
அமரர்கள் பின் அமுது உண, நஞ்சு உண்டார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி