நீறு அணிந்த திருமேனி நிமலர் போலும்; நேமி, நெடுமாற்கு,
அருளிச் செய்தார் போலும்;
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும்; எயில்
மூன்றும் எரிசரத்தால் எய்தார் போலும்;
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும்; வியன்
வீழிமிழலை உறை விகிர்தர் போலும்;
ஆறு அணிந்த சடா மகுடத்து அழகர் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.