திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கரி உரி செய்து உமை வெருவக் கண்டார் போலும்;
கங்கையையும் செஞ்சடை மேல் கரந்தார் போலும்;
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும்;
ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும்;
விரி கதிரோர் இருவரை முன் வெகுண்டார் போலும்;
வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும்;
அரி பிரமர் துதி செய நின்று அளித்தார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி