கயிலாயமலை எடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்து
அருளிச்செய்தார் போலும்;
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்து
ஆட வல்ல குழகர் போலும்;
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும்; வியன்
வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
அயில் ஆய மூ இலைவேல் படையார் போலும் அடியேனை
ஆள் உடைய அடிகள் தாமே.