குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும்;
குடமூக்கில் இடம் ஆக்கிக் கொண்டார் போலும்;
புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும்; புள் அரசைக்
கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும்;
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும்;
வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும்;
அண்டத்து உப் புறத்து அப்பால் ஆனார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.