முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும்; மொய்
பவளக்கொடி அனைய சடையார் போலும்;
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும்;
இரு-நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்;
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும்; வியன்
வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.