திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்;
பனைக் கனி பழம் படும் பரவையின் கரை மேல்
எனக்கு இனியவன், தமர்க்கு இனியவன், எழுமையும்
மனக்கு இனியவன் தனது இடம் வலம்புரமே.

பொருள்

குரலிசை
காணொளி