திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

எறிந்த சண்டி, இடந்த கண்ணப்பன், ஏத்து பத்தர் கட்கு ஏற்றம் நல்கினீர்!
செறிந்த பூம்பொழில்-தேன் துளி வீசும் திரு மிழலை,
நிறைந்த அந்தணர் நித்தம்-நாள்தொறும் நேசத்தால் உமைப் பூசிக்கும்(ம்) இடம்
அறிந்து, வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

பொருள்

குரலிசை
காணொளி