திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

பரந்த பாரிடம் ஊர் இடைப் பலி பற்றிப் பாத்து உணும் சுற்றம் ஆயினீர்;
தெரிந்த நால்மறையோர்க்கு இடம் ஆய திரு மிழலை
இருந்து, நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்;
அருந் தண் வீழி கொண்டீர்!;-அடியேற்கும் அருளுதிரே!

பொருள்

குரலிசை
காணொளி