பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும் உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியில் பிரம ஆதிகள் மிகு சத்தி கதியில் கரணம் கலைவை கரியே.
செய்திடும் விந்து பேதத்தின் திறன் ஐ ஐந்தும் செய்திடும் நாத பேதத் திறனால் ஆறும் செய்திடும் மற்று அவை ஈர் இரண்டில் திறம் செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே.
வந்திடு பேதம் எல்லாம் பர விந்துமேல் தந்திடு மா மாயை வாகேசி தற்பரை உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி விந்துவில் இந்நான்கும் மாவா விளங்குமே.
விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகர ஆதி வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே.
அந்தமும் ஆதியும் ஆகிப் பரா பரன் வந்த வியாபி எனல் ஆய் அந்நெறி கந்தம் அது ஆகிய காரண காரியம் தந்து ஐங் கருமமும் தான் செய்யும் வீயமே.
வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால் ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக் காய ஐம்பூதமும் காரிய மாயையில் ஆயிட விந்து அகம் புறம் ஆகுமே.
புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை உற மகிழ் சத்தி சிவ பாதம் ஆய் உள் திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே.
கொண்ட இவ் விந்து பரமம் போல் கோது அற நின்ற படம் கடம் ஆய் நிலை நிற்றலில் கண்டகல் ஆதியின் காரண காரியத்து அண்டம் அனைத்தும் ஆய் மா மாயை ஆகுமே.
அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி இது வித்திலே உள ஆற்றை உணரார் மது வித்திலே மலர் அன்னம் அது ஆகிப் பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே.
வித்தினில் அன்றி முளை இல்லை அம் முளை வித்தினில் அன்றி வெளிப்படும் ஆறில்லை வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல அத்தன்மை ஆகும் அரன் நெறி காணுமே.
அருந்திய அன்னம் அவை மூன்று கூறு ஆம் பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்னத் திருந்தும் உடல் மனம் ஆம் கூறு சேர்ந்திட்டு இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே.
இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின் உரிய தினத்தின் ஒரு புல் பனி போல் அரிய துளி வந்து ஆகும் ஏழ் மூன்றின் மருவிய விந்து வளரும் காயத்திலே.
காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு காயத்து உள் தன் மனம் ஆகும் கலா விந்து நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.
அழிகின்ற விந்து அளவை அறியார் கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார் அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர் அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே.