திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள
எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.

பொருள்

குரலிசை
காணொளி