திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

வலிய காலன் உயிர் வீட்டினான், மடவாளொடும்
பலி விரும்பியது ஒர் கையினான், பரமேட்டியான்
கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே.

பொருள்

குரலிசை
காணொளி