திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

வசை அறு மா தவம் கண்டு, வரிசிலை வேடனாய்,
விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார்;
இசை வரவிட்டு, இயல் கேட்பித்து, கல்லவடம் இட்டு,
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே.

பொருள்

குரலிசை
காணொளி