குணக்கும் தென் திசைக்கண்ணும் குடபாலும் வடபாலும்
கணக்கு என்ன அருள் செய்வார், கழிந்தோர்க்கும்
ஒழிந்தோர்க்கும்;
வணக்கம் செய் மனத்தாராய் வணங்காதார் தமக்கு என்றும்
பிணக்கம் செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.