விரித்தார், நால்மறைப் பொருளை; உமை அஞ்ச, விறல் வேழம்
உரித்தார், ஆம் உரி போர்த்து; மதில் மூன்றும் ஒரு
கணையால்
எரித்தார் ஆம், இமைப்பு அளவில்; இமையோர்கள் தொழுது
இறைஞ்சப்
பெருத்தார்; எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே.