குழலின் வரிவண்டு முரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
“கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள்” என்று அமரர்
கூடித்
தொழலும் வழிபாடும் உடையார்; துயரும் நோயும் இலர் ஆவர்
அழலும் மழு ஏந்து கையினான்; உறைவது அவளிவணலூரே.