திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

குழலின் வரிவண்டு முரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
“கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள்” என்று அமரர்
கூடித்
தொழலும் வழிபாடும் உடையார்; துயரும் நோயும் இலர் ஆவர்
அழலும் மழு ஏந்து கையினான்; உறைவது அவளிவணலூரே.

பொருள்

குரலிசை
காணொளி