“ஒருவரையும் மேல் வலி கொடேன்” என எழுந்த விறலோன்,
“இப்
பெருவரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ?” என
வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை,
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது
அவளிவணலூரே.