“வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே!” என்கின்றாளால்;
“விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு” என்கின்றாளால்;
“உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப் பட்டு உடையன்” என்கின்றாளால்-
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!