“அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக் கீழ் அடர்த்தவனே!” என்கின்றாளால்;
“சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ணவெண் நீற்றவனே!” என்கின்றாளால்;
“மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு, அன்று, உரைத்தான்” என்கின்றாளால்-
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!