பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“முதிரும் சடை முடி மேல் மூழ்கும், இள நாகம்” என்கின்றாளால்; “அது கண்டு, அதன் அருகே தோன்றும், இளமதியம்” என்கின்றாளால்; “சதுர் வெண் பளிக்குக் குழை காதில் மின்னிடுமே” என்கின்றாளால்- கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!