திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

“பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே!” என்கின்றாளால்;
“எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே!” என்கின்றாளால்;
“பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே!” என்கின்றாளால்-
கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொருள்

குரலிசை
காணொளி