திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

உவந்திட்டு அங்கு உமை ஓர் பாகம் வைத்தவர்; ஊழி ஊழி
பவர்ந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றி,
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
சிவந்திட்ட கண்ணர் போலும்-திருப் பயற்றூரனாரே.

பொருள்

குரலிசை
காணொளி