பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆவி ஆய், அவியும் ஆகி, அருக்கம் ஆய், பெருக்கம் ஆகி, பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய், பிரமன் ஆகி, காவி அம் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார்- திருப் பயற்றூரனாரே.