திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

பூண் அரவு ஆரத்தானே! புலி உரி அரையினானே!
காணில் வெண் கோவண(ம்) மும், கையில் ஓர் கபாலம் ஏந்தி,
ஊணும் ஊர்ப் பிச்சையானே! உமை ஒரு பாகத்தானே!
கோணல் வெண் பிறையினானே! கோடிகா உடைய கோவே!

பொருள்

குரலிசை
காணொளி