திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்,
கார் ஒத்த(ம்) மிடற்றர், கனல் வாய் அரா-
ஆரத்தர், உறையும்(ம்) அணி ஆரூரைத்
தூரத்தே தொழுவார் வினை தூளியே.

பொருள்

குரலிசை
காணொளி