திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக்
கலவர் ஆவதன் காரணம் என்கொலோ-
திலக நீள் முடியார், செம்பொன்பள்ளியார்,
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே.?

பொருள்

குரலிசை
காணொளி