“ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி!
ஆரமுதே!” என்றேன், நானே;
“கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள்
பூதப்பல் படையாய்!” என்றேன், நானே;
“பேர் ஆயிரம் உடையாய்!” என்றேன், நானே;
“பிறை சூடும் பிஞ்ஞகனே!” என்றேன், நானே;
“ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே!” என்று என்றே
நான் அரற்றி நைகின்றேனே!.