திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

“விண்ணோர் தலைவனே!” என்றேன், நானே;
“விளங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே;
“எண்ணார் எயில் எரித்தாய்!” என்றேன், நானே;
“ஏகம்பம் மேயானே!” என்றேன், நானே;
“பண் ஆர் மறை பாடி!” என்றேன், நானே;
“பசுபதீ! பால்நீற்றாய்!” என்றேன், நானே;
“அண்ணா! ஐயாறனே!” என்றேன், நானே; என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

பொருள்

குரலிசை
காணொளி