“அவன்” என்று நான் உன்னை அஞ்சாதேனை
“அல்லல் அறுப்பானே!” என்றேன், நானே;
“சிவன்” என்று நான் உன்னை எல்லாம் சொல்ல,
“செல்வம் தருவானே!” என்றேன், நானே;
“பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று
பண்டைவினை அறுப்பாய்!” என்றேன், நானே;
“அவன்” என்றே, “ஆதியே! ஐயாற(ன்)னே!”என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!