“கச்சி ஏகம்பனே!” என்றேன், நானே; “கயிலாயா!
காரோணா!” என்றேன், நானே;
“நிச்சல் மணாளனே!” என்றேன், நானே; “நினைப்பார்
மனத்து உளாய்!” என்றேன், நானே;
“உச்சம் போது ஏறு ஏறீ!” என்றேன், நானே;
“உள்குவார் உள்ளத்தாய்!” என்றேன், நானே;
“அச்சம் பிணி தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!.