திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

“வில் ஆடி வேடனே!” என்றேன், நானே; “வெண்நீறு
மெய்க்கு அணிந்தாய்!” என்றேன், நானே;
“சொல் ஆய சூழலாய்!” என்றேன், நானே; “சுலா
ஆய தொன்னெறியே!” என்றேன், நானே;
“எல்லாம் ஆய் என் உயிரே!” என்றேன், நானே;
“இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்!” என்றேன், நானே;
“அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்றுஎன்றே
நான் அரற்றி நைகின்றேனே!.

பொருள்

குரலிசை
காணொளி