“இண்டைச் சடைமுடியாய்!” என்றேன், நானே;
“இருசுடர் வானத்தாய்!” என்றேன், நானே;
“தொண்டர் தொழப்படுவாய்!” என்றேன், நானே;
“துருத்தி நெய்த்தானத்தாய்!” என்றேன், நானே;
“கண்டம் கறுத்தானே!” என்றேன், நானே; “கனல்
ஆகும் கண்ணானே!” என்றேன், நானே;
“அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாற(ன்)னே!”
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.