திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

“தொல்லைத் தொடு கடலே!” என்றேன், நானே;
“துலங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே;
“எல்லை நிறைந்தானே!” என்றேன், நானே;
“ஏழ்நரம்பின் இன் இசையாய்!” என்றேன், நானே;
“அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி
அருள்செய்தாய்!” என்றேன், நானே;
“எல்லை ஆம் ஐயாறா!” என்றேன், நானே; என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

பொருள்

குரலிசை
காணொளி