திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

“பற்றார் புரம் எரித்தாய்!” என்றேன், நானே;
“பசுபதீ! பண்டரங்கா!” என்றேன், நானே;
“கற்றார்கள் நாவினாய்!” என்றேன், நானே; “கடு
விடை ஒன்று ஊர்தியாய்!” என்றேன், நானே;
“பற்று ஆனார் நெஞ்சு உளாய்!” என்றேன், நானே;
“பார்த்தற்கு அருள்செய்தாய்!” என்றேன், நானே;
“அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாற(ன்)னே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

பொருள்

குரலிசை
காணொளி