திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கேசி

வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
“நாதா!” எனவும், “நக்கா!” எனவும், “நம்பா!” என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.

பொருள்

குரலிசை
காணொளி