பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக, கருணையினால் நிற்பானைப் போல, என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி, நல் பால் படுத்து என்னை, நாடு அறியத் தான் இங்ஙன், சொல் பாலது ஆனவா தோள் நோக்கம் ஆடாமோ!