மொண்டு அலம்பிய வார்திரைக்கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும்
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலிக் காழி,
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய
மாந்தர்தம் வினை
விண்டல் அங்கு எளிது ஆம்; அது நல்விதி ஆமே.