பரு மராமொடு, தெங்கு, பைங்கதலிப் பருங்கனி உண்ண, மந்திகள்
கருவரால் உகளும் வயல், சூழ் கலிக் காழி,
"திருவின் நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர்ச்
செல்வன் ஆகிய
இருவர் காண்பு அரியான்" என ஏத்துதல் இன்பமே.