மையின் ஆர் பொழில் சூழ, நீழலில் வாசம் ஆர் மது மல்க, நாள்தொறும்
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலிக் காழி,
"ஐயனே! அரனே!" என்று ஆதரித்து ஓதி, நீதி உளே
நினைபவர்,
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே.