மைத்த வண்டு எழு சோலை ஆலைகள், சாலி சேர் வயல், ஆர, வைகலும்
கத்து வார்கடல் சென்று உலவும் கலிக் காழி
அத்தனே! அரனே! அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய்!
உன கழல்
பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே!