திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர், வல்ல
வகையால்,
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி
இடம் ஆம்
நீளி வளர் சோலைதொறும் நாளிபல துன்று கனி நின்றது
உதிர,
வாளை குதிகொள்ள, மது நாற மலர் விரியும் வயல்
வைகாவிலே.

பொருள்

குரலிசை
காணொளி