திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

கை இருபதோடு மெய் கலங்கிட, விலங்கலை எடுத்த கடியோன்
ஐ-இருசிரங்களை ஒருங்கு உடன் நெரித்த அழகன் தன் இடம்
ஆம்
கையின் மலர் கொண்டு, நல காலையொடு மாலை, கருதி,
பலவிதம்
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும், எழில்
வைகாவிலே.

பொருள்

குரலிசை
காணொளி